இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம் ! தீவிர வாக்கு வேட்டையில் தலைவர்கள்

வேலூரில் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின்னர் வருகின்ற 15 ஆம் தேதி நடைபெறுகிறது.வேலூர் தேர்தலில் முக்கிய கட்சிகளான அதிமுக ,திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள்  போட்டியிடுகின்றது.

அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்.

வேட்பாளர்களை ஆதரித்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இதனையடுத்து இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.இதனால்  அதிமுக சார்பில் போட்டியிடும்  ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.