BREAKING: மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு .!

தமிழகத்தில் மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர்  பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை அமைந்துள்ளது.நாகையில் இருந்து மயிலாடுதுறையை பிரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது வந்தது .இதனையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரீசீலனை செய்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமியும் தெரிவித்தார்.    

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.இதனால் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 38 -ஆகிறது. 

author avatar
murugan