டெல்லி மற்றும் ஹரியானாவில் நிலநடுக்கம்.! பொதுமக்கள் பதற்றம்.!

டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஏற்கனவே கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இன்று இரவு 9.20 மணிக்கு தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் பதற்றத்தில் உள்ளனர். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.