சீனாவில் பயங்கர நிலநடுக்கம்! 100க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின!

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்! 100க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின!

சீனாவில், சிச்சுவான் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 6.40 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.4 என ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

1000க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. இந்த நிலநடுக்கத்தால் ஒரே ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதாவும், 60க்கும் மேற்பட்டவர்கள் அடிபட்டதாகவும், மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube