தேவையில்லை இ-பாஸ் இவர்களுக்கு !-அரசு அதிரடி

பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர புதிய இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 6.,ந்தேதி பின்பு பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு செல்ல  அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்குக்கு முன் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் வழங்கப்பட்ட இ-பாஸ்களையே தற்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

இது தொடர்பாக  அரசு வெளியிட்டுள்ள தனது  செய்திக் குறிப்பில்  கூறியுள்ளதாவது: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 6 முதல் பல்வேறு வகை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், பிற பகுதிகளில் 100 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட தமிழக அரசு அனுமதித்தது.

இந்நிலையில் பணி நிமித்தமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டிய சூழல் உள்ள பணியாளர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட இ-பாஸ்களையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுவரை இ-பாஸ் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின் படி விண்ணப்பித்து அதனைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட இவர்களுக்கு புதிய இ-பாஸ் தேவையில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha