DYFI மாநாடு நிறைவு….புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு…..!!

  • இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நிறைவு
  • புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியுடன் சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றது. வெள்ளிக்கிழமை தொடங்கிய பேரணி  பொது கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் ,
தலைவர்கள் பேச்சு :
மாநிலங்கவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் ,  DYFI-யின் அகில இந்திய தலைவர் முகம்மது ரியாஸ் , அகில இந்திய பொது செயலாளர் அவாய் முகர்ஜி  , த.மு.எ.க.ச மாநில தலைவர் சு.வெங்கடேசன் ,  DYFI-யின் மாநில தலைவர் எம்.செந்தில் , மாநில செயலாளர் எஸ்.பாலா , மாநில பொருளாளர் தீபா மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்  ரெஜிஸ்குமார் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்று பேசினர்.

வேலைவாய்ப்பு :
அதை தொடர்ந்து நேற்றும் , இன்றும் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வாலிபர் சங்க தலைவர்கள் பங்கேற்ற பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.இதில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மத்தியில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களின்  மக்கள் விரோத தவறான கொள்கைகளால் வேலைவாய்ப்பை இழந்து நிற்கும்  இளைஞர்களின் வாழ்கை சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

சிறப்பு தீர்மானங்கள் : 
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு  தீர்வு காணும் வகையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து , குறிப்பாக ஸ்டெர்லைட் , ஜாதி ஆணவ படுகொலை , நீட் தேர்வு உள்ளிட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து மக்கள் நலன் காக்க வழிவகை செய்யும் வகையில் , ஏராளமான சிறப்பு  தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.வாலிபர் சங்க மாநாடு கொடியேற்றத்துடன் துவக்கம்…! க்கான பட முடிவு
நிர்வாகிகள் தேர்வு : 
அதில் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய  மாநில தலைவராக  ரெஜிஸ்குமாரும் , புதிய மாநில செயலாளராக பாலாவும் , புதிய மாநில பொருளாளராக  தீபா_வும் தேர்வு செய்யப்பட்டனர்.இதே போல 12 பேர் கொண்ட   புதிய மாநில செயற்குழுவும் , 81 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

மக்களை கவர்ந்த மாநாடு :
இன்றய காலகட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் , மதவாத சக்திகள் , இனவாத குழுக்கள் மற்றும் ஜாதிய வெறியர்கள் என தமிழகம் படும் சீரழிவை சுட்டிக்காட்டும் வகையில், அரசியல் திருப்புமுனை மாநாடாக  குறிப்பாக இளைஞர்கள் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் மாநாடாக பார்க்கப்பட்டு சிவகங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
 
மேலும் செய்திகளுக்கு  dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment