புதுச்சேரியில் நாளை விடுமுறை!

கனமழை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில்  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.இதன் விளைவாக    கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில்  கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.