வெள்ளத்தில் மூழ்கி தவிக்கும் நூறு தீவுகள் கொண்ட வெனிஸ் நகரம்..!!

உலக புகழ் பெற்ற இத்தாலிய நகரமான வெனிஸ் நகரத்தில் ஆறடி வெள்ளத்தில் மூழ்கப்பட்டுள்ளதா தெரிவித்துள்ளார்கள். அதன் பழமையான கட்டடங்கலில் நீர் சூழ்ந்து காணப்படுவதை தொடர்ந்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வெனிஸ் நகரத்திலுள்ள பெரும்பாலான அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள வெனிஸின் மேயர் லூய்கி ப்ருக்னாரோ, கடந்த ஐம்பதாண்டுகளில் இந்த வாரம்தான் வெனிஸில் அதிகளவு நீர் வந்துள்ளதாகவும் இதன்பாதிப்பு மிகப்பெரியது என்று கூறுகிறார்.வெனிஸின் 80 சதவீத இடங்கள் கடல் அலையின் தீவிரத்தால் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெனிஸ் நகரத்தின் எண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான தேவாலயங்கலில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.முக்கியமாக சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி வெனிஸ் நகரத்தில் வியாபாரம் செய்து வருபவர்கள் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.