குடிநீர் தட்டுப்பாடு : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இந்த  கூட்டத்தில் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் மற்றும் துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.