வயிற்றுக் கோளாறு , உடல்சூடு போன்றவை குணமடைய இந்த டீயை குடிங்க ..!

நம் உடலிலுள்ள நெஞ்எரிச்சல் , வயிற்றுக் கோளாறு, உடல்சூடு, வாந்தி மற்றும் விக்கல் போன்ற நோய்களுக்கு பெரும் மருந்தாக கொத்தமல்லி டீ உள்ளது. கொத்தமல்லி டீ எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி விதை 10 கிராம்

சீரகம்- 2 கிராம்

சுக்கு- 2 கிராம்

பனங்கற்கண்டு தேவையான அளவு

மஞ்சள்தூள் -ஒரு சிட்டிகை

ஏலக்காய் -ஒரு  சிட்டிகை

செய்முறை:

கொத்தமல்லி, சீரகம் மற்றும் சுக்கு ஆகிய மூன்றையும் குறிப்பிட்ட அளவு எடுத்து ஒன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு தேக்கரண்டி பொடியை ஒரு டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஏலக்காய் சேர்த்து தினமும் இருவேளை குடித்து வந்தால் மேலே குறிப்பிட்ட நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.

author avatar
murugan