“ரிடையர்ட் ஆகாதிங்கனு இளம் வீரர்கள் சொன்னாங்க” யுனிவர்சல் பாஸ் பெருமிதம்!

கிறிஸ் கெயிலை ரிடையர்ட் ஆகவேண்டாம் என்று பஞ்சாப் அணியின் இளம் வீரர்கள் கூறியுள்ளார்கள். 

பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நடப்பாண்டு தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை இந்த சீசனில் மட்டும் 5 போட்டிகள் விளையாடி 177 ரன்கள் அடித்துள்ளார். அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் என பல சாதனைகளை வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் –  கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக 150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி மிகவும் சிறப்பாக விளையாடி 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு இருந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் மிகவும் அதிரடியாக மந்திப் சிங் மற்றும் கிறிஸ் கெயில் விளையாடினார்கள்.  ஆம் மந்திப் சிங் 56 பந்துகளில் 66 ரங்களும் கெயில் 29 பந்துகளில் 51 ரங்களும் அடித்தனர். இதன் காரணமாகவே பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய கிறிஸ் கெயில் கூறியது ” நான் சிறப்பாக ஆடினேன் என்று உணர்கிறேன். எங்கள் அணியில் உள்ள இளம் வீரர்கள் என்னை ரிடையர்ட் ஆக வேண்டாம் என்று கூறினார்கள்” என்று கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.