என் திருமணம் குறித்து பிறர் கவலைப்பட வேண்டாம்! காட்டமான கருத்தை தெரிவித்த அனுஷ்கா!

நடிகை அனுஸ்கா பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது திருமணம் குறித்த வதந்தியான செய்திகள் பரவி வருகிறது. இவர் நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

இதனை தொடர்ந்து இவருக்கும், ஒரு மருத்துவருக்கும் திருமணமாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பதிலளித்த அனுஷ்கா, நான் எனது திருமணத்தை பெற்றோர்கள் கையிலே கொடுத்துவிட்டேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் பிரகாஷ் கோவளமுடியை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் துழாவியது. இதனால் கோபமடைந்த அனுஸ்கா, ‘என் திருமணம் குறித்து பிறர் கவலைப்பட வேண்டாம்.’ என காட்டமான கருத்தினை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.