காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம்-குலாம்நபி ஆசாத்

காங்கிரஸ்  மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம் .அதிகப்படியான பாதுகாப்புப்படை குவிப்பு, அமர்நாத் யாத்ரீகர்களை திரும்ப செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளிட்டவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்மோகன் சிங் தலைமையில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், ஜம்மு காஷ்மீர் கொள்கை அமைப்பு குழுவை சந்தித்தோம். ஜம்மு காஷ்மீர் குறித்து வெளியாகும் தகவல் பற்றி ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்தோம் என்று காங்கிரஸ்  மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.