வதந்திகளை நம்பாதீர்கள்! டாஸ்மாக் நிர்வாகம் வேண்டுகோள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தாண்டு. இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் கடைகள், டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் 2 மணி நேரம் செயல்படும் என்று சமூக வலைத்தளங்களில் வதந்தியான செய்திகள் பாராவை வருகிறது. 

இதுகுறித்து விளக்கமளித்த டாஸ்மாக் நிர்வாகம், இது போன்ற எந்த அறிவிப்பையும் அரசு அறிவிக்கவில்லை. அரசு ஏற்கனவே அறிவித்தபடி ஏப்ரல் 14-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.