எச்சரிக்கை எல்லாம் வேண்டாம் !சொல்ல வேண்டிய கருத்தை மட்டும் சொல்லுங்கள் வைகோ -வெங்கய்யா நாயுடு

எச்சரிக்கை எல்லாம் வேண்டாம் !சொல்ல வேண்டிய கருத்தை மட்டும் சொல்லுங்கள் வைகோ -வெங்கய்யா நாயுடு

மாநிலங்களவையில் மதிமுக எம்.பி.வைகோ பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதித்தால் தமிழகம் எத்தியோப்பியாவாக மாறிவிடும்.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் வாழ்வாதாரத்தை பாதிக்கும் .மாணவர்கள், விவசாயிகள் கடுமையாக இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நான் எச்சரிக்கிறேன் என்று பேசினார்.

இதற்கு  மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, எச்சரிக்கை எல்லாம் கொடுக்க கூடாது, சொல்ல வேண்டிய கருத்தை மட்டும் சொல்லுங்கள் என்று தெரிவித்தார்.

 

 

Join our channel google news Youtube