கண்களின் கருவளையம் உங்கள் அழகை கெடுக்கிறதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

கண்களின் கருவளையம் நீங்க சூப்பர் டிப்ஸ்.

இன்றைய இளம் தலைமுறையினர், தங்களது சரும அழகை மெருகூட்டுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள், அதிகமான பணத்தை செலவு செய்து, கடைகளில் செயற்கையான, கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கண்ணில் உள்ள கருவளையத்தை போக்குவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • வெள்ளரிக்காய் விதை
  • தயிர்

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெள்ளரிக்காய் விதையை எடுத்து, நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்

பின் ஒரு பௌலில், பொடி செய்யப்பட்ட வெள்ளரிக்காய் விதை மற்றும் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல தயார் செய்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை கருவளையம் உள்ள பகுதியில், 30 நாட்கள் தொடர்ந்து பூசி வந்தால், இந்த கருவளையம் நீங்கி விடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.