வீடுகள் இல்லாமல் பரிதவிக்கும் மருத்துவர்கள்!

வீடுகள் இல்லாமல் பரிதவிக்கும் மருத்துவர்கள்!

இன்று உலகம் முழுவதும் கொரோனா என்றாலே அச்சத்தில் தான் மிதந்து கொண்டிருக்கின்றனர். இந்த கொரோனா இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் இதன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவர் சங்கம் சார்பில், சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாடகைக்கு குடியிருக்கும் மருத்துவர்களை வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய வற்புறுத்துவதாகவும், இதற்க்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  கோரியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube