IPL2020: பெர்குசனின் அதிரடி பந்துவீச்சை சமளிக்குமா கிங் கோலியின் “பெங்களூர்” அணி?

ஐபிஎல் தொடரின் 39 ஆம் போட்டியான இன்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, அபுதாபியில் நடைபெறவுள்ளது. இன்று நடைபெறும் இந்த போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 9 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் கொல்கத்தா அணி 5 போட்டிகளிலும், பெங்களூர் அணி 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டி அபுதாபியில் நடைபெறும் காரணத்தினால், இரு அணிகளிலும் ஸ்பின் பவுலர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் அணியில் தொடக்கம் முதல் அதிரடியான பேட்டிங் இருப்பது, அணிக்கு கூடுதல் பலம். கொல்கத்தா அணியில் கடந்த போட்டியில் பெர்குசனின் அதிரடி பந்துவீச்சால் ( ஒரே போட்டியில் 5 விக்கெட் [2 சூப்பர் ஓவர்] அபாரமாக வெற்றிபெற்றது. இது, அந்த அணிக்கு கூடுதல் பலம். மேலும், இவ்விரு அணிகளும் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பெங்களூர் அணி 11 முறையும், கொல்கத்தா அணி 14 முறையும் மோதியுள்ளது.

தற்பொழுது பஞ்சாப் அணி அதிரடியாக ஆடிவரும் நிலையில், இன்று கொல்கத்தா அணி வெற்றிபெற்றால் மட்டுமே புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல பெங்களூர் அணியும் வெற்றிபெற்றால் இரண்டாம் இடத்திற்கு வரும். ஆகையால் இன்றைய போட்டி சூடுபிடிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.