எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி! நடந்தது என்ன?!

ஆந்திர மாநிலம் ஹைதிராபாத், கொல்லப்பூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் பிரியங்கா ரெட்டி. இவரது உடல் நேற்று காலை எரித்து கொல்லப்பட்ட நிலையில் பெங்களூரு – ஹைதிராபாத் நெடுஞ்சாலையில் கண்டெக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளகியுள்ளது.
டாக்டர் பிரியங்கா ரெட்டி, நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல தன்னுடைய பணிகளை முடித்துவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் வழக்கம் போல வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய வண்டி பஞ்சராகியுள்ளது. உடனே அவர், தன்னுடைய வீட்டிற்கு போன் செய்து பஞ்சரானதை கூறியுள்ளார். மேலும்,  அங்குள்ள ஒரு லாரி ஓட்டுநர் உதவி செய்வதாக கூறியுள்ளார்.
இதற்கடுத்து இரவு 9 மணிக்கு போன் செய்து, தான் ஒரு டோல்கேட் அருகில் இருப்பதாக கூறினார். மேலும் தனக்கு பதட்டமாக இருப்பதாக  கூறினார்.இதற்கடுத்து அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. அதனை அடுத்து பதறிய உறவினர்கள், ப்ரியங்கா ரெட்டியை தேடி அவர் குறிப்பிட்ட டோல்கேட்டிற்கு சென்று பார்த்தனர். ஆனால், அவர், அங்கு இல்லை. உடனே காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போயிருந்த பிரியங்காவை  தேடி வந்தனர்.
அந்த சமயம் ஹைதிராபாத் – பெங்களூரு சாலையில் ஒரு பாலத்தில் அடியில் எரித்து கொல்லப்பட்ட நிலையில் ஒரு சடலம் இருப்பதை அங்குள்ள ஒரு பால்காரர் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றினர்.
பின்னர் பிரியங்கா ரெட்டி குடும்பத்திற்கு  தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது சகோதரி, ப்ரியங்கா அணிந்திருந்த செயின் போன்ற பொருட்களை வைத்து அடையாளம் கண்டறிந்தார். பின்னர், எரித்து கொல்லப்பட்டது டாக்டர் ப்ரியங்கா ரெட்டி தான் என்பதை உறுதி செய்து, இந்த சாவிற்க்கு காரணமானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.