முக அழகை கெடுக்கும் பருக்களுக்கு ஒரே மாதத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா…? அப்ப இதை செய்து பாருங்க….!!!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே பருக்கள் தான். இந்த பருக்களை போக்குவதற்கு பல வழிகளில் மருத்துவங்களை மேற்கொண்டாலும், அதற்கான தீர்வு கிடைப்பதில்லை, மாறாக பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது.

முகத்தில் பருக்கள் அதிகம் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிமாக காணப்படும் எண்ணெய் பசை தான். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு அதனால் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

முகத்தில் உள்ள பருக்களை போக்க சில வழிகள் :

வேப்பிலை :

Related image

தினமும் குளிக்கும் முன் வேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள பருக்களை எளிதில் போக்கலாம்.

ஜாதிக்காய் :

Related image

ஜாதிக்காயை சிறிது நீர் சேர்த்து கல்லில் தேய்த்து வரும் பேஸ்ட்டை பருக்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, அவை மீண்டும் உருவாகுவதை தடுக்கலாம்.

உடலை சரியாக பராமரித்தல் :

பருக்கள் முதலில் உடலினுள் தான் ஆரம்பமாகிறது. அதிலும் டாக்சின்கள் உடலில் அதிகம் இருந்தால், உடலினுள் பருக்கள் உருவாக ஆரம்பித்து, நாளடைவில் முகத்தில் தெரியும். எனவே தினமும் அதிகப்படியான அளவு நீரை குடித்து, உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி பழங்கள் மாற்றம் காய்கறிகளையும் தவறாமல் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

Related image

உங்கள் முடியில் எண்ணெய் பசை அதிகம் இருப்பின், அதன் காரணமாகவும் பருக்கள் வரக்கூடும். எனவே வாரத்திற்கு 2 முறை தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். மேலும் உடல் எடையையும் சீராக பராமரித்து நல்ல தூக்கத்தையும் மேற்கொள்ளுங்கள்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment