நீட் மற்றும் ஜே.இ.இ மெயின் தேர்வுகள் எப்போது நடைபெறும் தெரியுமா?

நீட் மற்றும் ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்கலை நடத்தி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், அனைத்து தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு மற்றும் ஜே.இ.இ மெயின் தேர்வுகள், ஜூன் மாதம் 2 அல்லது 3-வது வாரத்தில் நடத்த, தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.