மணமணக்கும் முருங்கைக்காய் வடை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா !

மணமணக்கும் முருங்கைக்காய் வடை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா !

முருங்கைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் காய்கறியாகும்.இந்த முருங்கைக்காயில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது. முருங்கைகாயை நாம் உணவில் சேர்த்து கொள்ளுவது மிகவும் நல்லது.இது நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும்.

இந்த பதிப்பில் நாம் முருங்கைக்காய் வடை எப்படி செய்யலாம் என்பதை பற்றி படித்தறியலாம்.

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் -4

பொட்டுக்கடலை -1 கப்

இஞ்சி துருவல் -1/2 தேக்கரண்டி

வெங்காயம் -1

கருவேப்பில்லை -தேவையான அளவு

பெருங்காயம் -1/2 தேக்கரண்டி

கொத்த மல்லி – சிறிதளவு

தேவையான அளவு எண்ணெய்

செய்முறை :

முதலில் முருங்கைக்காயை முதலில் வேக வைத்து சதை பகுதியை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

பின்பு பொட்டு கடலையை நீர் விடாமல் அரைத்து ரவை பதத்திற்கு எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அரைத்த பொட்டுக்கடலை ,முருங்கைக்காய்ச்சதைப்பகுதி ,கொத்தமல்லி ,கறிவேப்பிலை , பெருங்காயதூள் ,இஞ்சி துருவல் , வெங்காயம் முதலிய அனைத்து பொருட்களையும் சேர்த்து வடை போல் தட்டி ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் வடையாக தட்டி போட்டு பொன்னிறமானவுடன் பொரித்து எடுக்கவும்.

 

 

 

Join our channel google news Youtube