திமுக கட்சி அல்ல கம்பெனி! திமுகவும் தினகரனும் தொடர்பு வைத்துள்ளனர்! முதல்வர் கடும் விமர்சனம்

சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரச்சாரப் பணிகளை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது பேசுகையில், ‘தினகரனையும் ஸ்டாலினையும் கடுமையாக தாக்கி பேசினார். மேலும், ‘ஸ்டாலினும் தினகரனும் வெளியே எதிரி போல காட்டிக்கொண்டாலும், அவர்களுக்குள் தொடர்பு வைத்து உள்ளனர். இதனை, அமமுகவை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் வெளிப்படையாக காட்டிவிட்டார்’

மேலும், ‘இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் அவர்களின் எம் எல் ஏ எண்ணிக்கை உயருமே தவிர மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இடைத்தேர்தலில் தன் கட்சி ஜெயிக்க வேலை செய்வதைவிட அதிமுக தோற்க்க வேண்டும் என பல வேலைகளை செய்து வருகிறார் தினகரன். அவருக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். திமுக ஒரு கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி ஆனால், அதிமுகவில் அடிமட்ட தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம். அதற்கு நானே சாட்சி.’ என சூலூர் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment