பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி -முதலமைச்சர் பழனிசாமி

நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்  ரெட்டியார்பட்டி வி.நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றது.திமுக அளித்த வாக்குறுதிகள் என்னவானது? என்றும்  முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்ய முடியாத காரியங்களை எல்லாம் கூறி திமுக தலைவர் வாக்கு பெற்றார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.