திமுக விருப்பமனு : அவகாசம் நீட்டிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோக அவகாசத்தை நீட்டித்துள்ளது திமுக.
உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி வருகிறது.இதற்கு ஏற்ற வகையில் கட்சிகள் அனைத்தும் விருப்பமனு பெரும் தேதியை அறிவித்து வருகின்றது.
இதனை தொடர்ந்து  திமுகவும் விருப்பமனுவை பெற்றுக்கொள்ள தேதியை அறிவித்தது.அதன்படி நவம்பர் 14 -ஆம் தேதி காலை 10 மணி முதல் வருகின்ற 20 ஆம் தேதி  வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை மாவட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோக அவகாசத்தை நீட்டித்துள்ளது திமுக.இது தொடர்பாக திமுக [பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,மாவட்ட கழக செயலாளர்கள் கால அவகாசம் நீடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில்  வருகின்ற 27-ஆம் தேதி வரை விருப்பமனுவிற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் விருப்ப மனு விநியோகம் நிறைவடைய இருந்த நிலையில் வரும் 27-ஆம்  தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.