கருத்துக்கணிப்புகளுக்கு பின்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்.,’ கருத்துக் கணிப்பை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான். அவர்களே கல்லூரியில் கருத்துக்கணிப்பு நடத்துவார்கள் அதையே மக்கள் மனதில் திணிப்பார்கள். அதையே தேர்தல் முடிவுக;ளாகவும் எதிர்பார்ப்பார்கள்.
இத்தனையும் மீறி கருத்துகணிப்புகளுக்கு பின்னால் பாஜக ஏற்பதாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி குற்றம் சாட்டுகிறார். மோடியின் நல்ல திட்டங்கள் தொடர வேண்டும் மக்கள் ஆசைப்படுகின்றனர். எந்த சுயநலமும் இல்லாத தலைவர் மோடி. இந்த கருத்துக்கணிப்பில் வெற்றி எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது.
இடைத்தேர்தலில் கருத்துக்கணிப்புகள் பொய்யாகும். எடப்பாடி ஆட்சி நீடிக்கும். ஸ்டாலின் கனவு நிறைவேறாது. அவர் தப்புக் கணக்குப் போடுகிறார். திமுக அலை கண்டிப்பாக வீசவில்லை நிச்சயமாக அதிமுக ஆட்சி வலுப்பெறும்’ என தெரிவித்தார்.
DINASUVADU