பிக்பாஸ் மூலம் மஹாபாரதம் பேசி குறிப்பிட்ட மதத்தினரின் வாக்கை பெற வேடம் போடுகிறார் – அமைச்சர் ஜெயக்குமார்

பிக்பாஸ் மூலம் மஹாபாரதம் பேசி குறிப்பிட்ட மதத்தினரின் வாக்கை பெற வேடம் போடுகிறார் – அமைச்சர் ஜெயக்குமார்

கமல் பிக்பாஸ் மூலம் மஹாபாரதம் பேசி குறிப்பிட்ட மதத்தினரின் வாக்கை பெற வேடம் போடுகிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமலஹாசன், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிசியாக ஈடுபட்டு வருகிறார். கமலஹாசனை பொறுத்தவரையில், அவர் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளையும் விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இதில் அதிமுகவை தான் அதிகமாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் மகாபாரதம்  குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகாபாரதம் பற்றி கமலஹாசன் பேசியது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிக்பாஸ் மூலம் மகாபாரதம் பற்றி பேசி, குறிப்பிட்ட மதத்தின் வாக்கினை பெற வேடம் போடுகிறார் என்றும், அவர் மாற்றி, மாற்றி பேசுபவர். கமல் என்ன பேசுகிறார் என்று யாருக்கும் புரியாது.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube