மேற்கு வங்கத்தில் மிகவும் அரிய வகை மஞ்சள் நிற ஆமை கண்டெடுப்பு.!

மிகவும் அரிதான மஞ்சள் நிற ஆமை மேற்கு வங்க மாநிலத்தின் பர்த்வான் மாவட்டத்தில் ஒரு குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இந்த மஞ்சள் நிற ஆமை குறித்து, இந்தியாவின் ஆமை சர்வைவல் அலையன்ஸ் (டிஎஸ்ஏ) திட்ட இயக்குனர் ஷைலேந்திர சிங் கூறுகையில், இது மரபணு மாற்றத்தால் நிறமி இழப்பின் காரணமாக இந்த நிறத்தில் உள்ளது என தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜூலை மாதம், ஒடிசாவின் பாலசூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள் மஞ்சள் ஆமையைக் கண்டனர். அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைகப்பட்டது. இது பொதுவாக, தெற்காசியாவில் காணப்படும் ஒரு நன்னீர் வகை ஆமை ஆகும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.