பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து எப்படியாவது வெற்றிபெற திமுக துடிக்கிறது – அதிமுக

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து எப்படியாவது வெற்றிபெற திமுக துடிக்கிறது என்று அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாளை விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.


அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமர் – சீன அதிபர் சந்திப்புக்கு தமிழ்நாடே சரியான இடம் என தீர்மானிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குடும்ப அரசியலை மீண்டும் கொண்டு வர நினைக்கும் கூட்டம், அதிமுகவை எதிர்த்து நிற்கிறது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து எப்படியாவது வெற்றிபெற திமுக துடிக்கிறது. தன்மீது புனையப்பட்ட அத்தனை பொய் வழக்குகளையும் துணிவுடன் எதிர்கொண்டவர் ஜெயலலிதா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.