வேலூர் மக்களவை தொகுதி : மீண்டும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டி -திமுக தலைமை அறிவிப்பு

 வேலூர் மக்களவை தொகுதி : மீண்டும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டி -திமுக தலைமை அறிவிப்பு

வேலூர் மக்களவை  தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார்.

பணப்பட்டுவாடா  புகார்  காரணமாக  வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.அப்போது அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்றும் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் வேலூர் மக்களவை  தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுக சார்பில் வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube