வேலூரில் 2014 ஐ காட்டிலும் இருமடங்கு வாக்குகள் பெற்று திமுக சாதனை!

வேலூரில் 2014 ஐ காட்டிலும் இருமடங்கு வாக்குகள் பெற்று திமுக சாதனை!

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.கடந்த 2014 ம் ஆண்டு திமுக பெற்ற வாக்குகளை விட தற்போது இருமடங்கு வாக்குகள் அதிகமாக பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 2014 ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் அப்துல் ரகுமான் 2,27,546 வாக்குகள் பெற்றார். ஆனால் தற்போது நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்றுள்ளார்.கடந்த தேர்தலை விட இந்த முறை திமுக இருமடங்கு வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது.

அதிமுக சார்பில் கடந்த 2014 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் செங்குட்டுவன் 3,83,719 வாக்குகள் பெற்று இருந்தார். பாஜக, பாமக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 3,24,326 வாக்குகள் பெற்றார். ஆனால், இந்த முறை அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அதே வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,193 வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டு 21,650 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தது.

ஒட்டுமொத்தமாக ஒப்பிடும் போது, திமுக கடந்த தேர்தலை காட்டிலும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளை பெற்றுள்ளது. அதே வேளையில், அதிமுக – காங்கிரஸ் கூட்டணி பாதியளவு வாக்குகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube