நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (பிப்ரவரி 29-ம் தேதி) திமுக எம்.பி.க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. 

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,திமுக கழக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கழக நாடாளுமன்ற கூட்டம் பிப்ரவரி 29-ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது கழக மக்களவை மற்றும் மாநிலவை உறுப்பினர்களை தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என  அறிவித்துள்ளார்.