திமுக தலைமையில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்.!

திமுக தலைமையில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்.!

திமுக சார்பில் வரும் 31 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

திமுக தலைமையில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் வரும் 31 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் பாஜக அரசு மற்றும் கொரோனா தடுப்பில் மத்திய – மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்குமுன் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கோரிக்கைகள் ஒவ்வொன்றும் முக்கியமானது. முதற்கட்டமாக 1 லட்சம் கோரிக்கை மனுக்கள் அனுப்பிய நிலையில், மின்னஞ்சல் வழியாக மேலும் பகிரும் 6 லட்ச கோரிக்கை மனுக்களை தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் http://ondrinaivomvaa.in வில் வெளியிடப்பட்டுள்ள இக்கோரிக்கைகள் ஒவ்வொன்றும் முக்கியமானது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube