“கீழடி கண்டேன்,கிளர்ச்சி கொண்டேன்” திமுக தலைவர் !

கீழடி ஆராய்ச்சியின் மூலம் தமிழர்களின் பண்பாடு மற்றும் பெருமையும் உலகளவில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கீழடி அகழாய்வு இடத்தை ஆய்வு செய்தார்.

கீழடி ஆய்வு செய்தது குறித்து ஸ்டாலின் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘கீழடியில் நின்றிருந்த போது மனதோ சந்திரயான் போல் வான்வரை பறந்து உயர்ந்து சென்றதாகவும் தமிழர்கள் பல இடங்களில் சிறந்த நாகரீகம் மற்றும் பண்பாட்டை கடைப்பிடித்து முன்னோடியாக திகழ்ந்தனர்’ என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கீழடி சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

author avatar
Vidhusan