திமுக வேண்டாம் என்று ஒதுக்கினாலும் மதிமுக, விசிக விலகும் நிலையில் இல்லை…!மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க  துணை நின்ற திமுக, காங்கிரஸ்  தமிழர்கள் பற்றி பேச தகுதி இல்லை என்று  மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன்  கூறுகையில், திமுக வேண்டாம் என்று ஒதுக்கினாலும் மதிமுக, விசிக விலகும் நிலையில் இல்லை. மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தரவில்லை, ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய மட்டுமே அனுமதி தரப்பட்டது. இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க துணை நின்ற திமுக, காங்., தமிழர்கள் பற்றி பேச தகுதி இல்லை என்றும் மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment