ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள்  கூட்டம்

இன்று  காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள்  கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. 

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.

இதனிடையே  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார் .அவரது அறிக்கையில், இன்று காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட  செயலாளர்கள் கூட்டம் எனது தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் .இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த கூட்டத்தில் கொரோனா காலத்தில் திமுகவின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.