தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு முன்பதிவு 23-ஆம் தேதி முதல் தொடக்கம்-அமைச்சர் விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு முன்பதிவு வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்பட உள்ளது.தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்பவும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.சிறப்பு முன்பதிவு வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் .கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.