தீபாவளி: வியாபாரிகள் அதிகாலை வரை கடை திறந்து வைக்கலாம்..!சென்னை உயர்நீதிமன்ற கிளை..!

இன்னும் சில நாள்களில் தீபாவளி பண்டிகை வருவதை தொடர்ந்து மதுரை வியாபாரிகள் நீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்தனர்.அதில் ,வட்டி கடன் பெற்று வியாபாரம் செய்வதால் அதிகாலை வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த  நீதிமன்றம்  தீபாவளிக்கு முந்தைய 25, 26-ம்  ஆகிய இரண்டு தேதிகளில் மதுரை மாவட்டத்தில் வியாபாரிகள் அதிகாலை 2 மணி கடைகளை திறந்து வைக்க அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. வியாபாரிகளின் நலன் கருதி  தேதி அதிகாலை 2 மணி நேர அனுமதிக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள் பாதுகாப்பு , ஷிப்ட் முறையில் பணியாளர்களைப் பின்பற்ற வேண்டும். காவல்துறையினரும் வரம்புகளை வகுத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்தது சென்னை உயர்நீதிமன்ற கிளை .
 

author avatar
murugan