குடிநீரில் ஏமாற்றம் – அதிர்ச்சியடைந்த பக்தர்கள்

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க அவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒப்பந்த ஊழியர்கள் சாலையோரம் உள்ள ஒரு குழாயில் நீரை பிடிப்பதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு வந்த பக்தர்கள் இந்த பிரச்னையில் தேவஸ்தானம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்