கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்தில் மீட்பு பணித்துறை இயக்குனர் ஆய்வு!

கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்தில் மீட்பு பணித்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆய்வு செய்துள்ளார், மேலும் அவ்வளாகத்திலேயே மரக்கன்று ஒன்றையும் நட்டுள்ளார்.

அங்கு ஆய்வு செய்த அவர், போதுமான தீயணைப்பு வீரர்கள் இருக்கிறார்களா? உபகரணங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்துள்ளார். மேம்மலை கீழ்மலை கிராமங்களுக்கு தனித்தனி தீயணைப்பு நிலையம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கைக்கு விரைவில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

author avatar
Rebekal