வர்மா படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?!

சேது, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், பரதேசி என தனது படங்கள் மூலம் தனி முத்திரை பதித்துள்ளவர் இயக்குனர் பாலா. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தயாரான படம் வர்மா. ரீமேக் படங்களை இயக்காத பாலா முதன்முதலாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம்-காக தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி தமிழில் வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்தார்.
அந்தப் படம் முழுவதும் முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கு படம் பிடிக்காத காரணத்தால் அப்படம் அப்படியே முடக்கப்பட்டு, அர்ஜுன் ரெட்டி ரீமேக் ஆதித்யா வர்மா எனும் பெயரில் துறவ் விக்ரம் நாயகனாக நடிக்க வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தை முடித்து சென்ற வாரம் ரிலீஸ் செய்து விட்டனர்.
ஆனால், தற்போது வரை இயக்குனர் பாலா அடுத்து என்ன படம் இயக்க உள்ளார் என்பதை வெளியிடாமல் இருந்து வருகிறார். ராமநாதபுரத்தை பின்னணியாக வைத்து ஒரு கதை எழுதி உள்ளதாகவும், அந்த கதையை நடிகர் சூர்யாவிடம் சொல்லி உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகின. ஆனால் இன்னும் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. மேலும் பாலா எழுதியுள்ளது இரண்டு ஹீரோ உள்ள கதை எனவும் கூறப்படுகிறது. விரைவில் அவர் இயக்கத்தின் யார் நடிக்கிறார் என்ற விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.