தினகரன் 23-ஆம் மூன்றாம் புலிகேசி – அமைச்சர் ஜெயக்குமார்

தினகரன் 23-ஆம் மூன்றாம் புலிகேசி என்று அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார். 
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது கூறுகையில், 
இடைத்தேர்தல் அதிமுக பெற்ற வெற்றியானது, தமிழ்நாட்டு மக்கள் அதிமுக அரசுக்கு அளித்த மகத்தான தீபாவளி பரிசு . இந்த வெற்றியின் மூலம் நரகாசுரன் அழிய வேண்டுமே என தமிழ்நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்.
தினகரன் 23-ஆம் மூன்றாம் புலிகேசி. அமமுகவை ஒரு லெட்டர் கட்சி என்று கூறலாம் ,அம்மாவின் படத்தை அவர்கள் கட்சி கொடியில் போடுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை .அவர்கள் வேண்டுமானால் அவர்கள் தியாகத் தலைவி என போற்றும் சின்னம்மாவின் படத்தை கட்சிக் கொடியில் போட்டுக் கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.