வீட்டிலேயே இருந்தால் பிரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு.! எந்த ஊரில் தெரியுமா?!

கொரோனா பாதிப்பு காரணமாகா நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக, அரசின் நலதிட்டங்கள் பெற என உரிய காரணங்களோடு வெளியே வருகின்றனர். இத்தனையும் கட்டுப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. 

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓர் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதன் படி, திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருக்கும் நபர்களுக்கு குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு முதல் பரிசாக பிரிட்ஜ், இரண்டாம் பரிசாக பீரோ, மூன்றாம் பரிசாக குக்கர் வழங்கப்படும் எனவும், மேலும் சமூக விலகலை சரியாக பயன்படுத்திய 108 பேருக்கு சேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளாராம்.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.