தங்கதமிழ்ச்செல்வன் விஸ்வரூபமெல்லாம் எடுக்க மாட்டார்!என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்!தினகரன் பதில்

தினகரனை விமர்சித்து தங்க தமிழ்செல்வன் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில் தேனி மாவட்ட  அமமுக நிர்வாகிகளுடன்  சென்னை அடையாறில் உள்ள  தனது இல்லத்தில் வைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,ரேடியோவில் கொடுத்த பேட்டி தொடர்பாக தங்க தமிழ்செல்வன் என்னிடம் விளக்கம் அளித்தார், இது குறித்து அவரை எச்சரித்தேன்.ஊடகங்களிடம் ஒழுங்காக பேசவில்லை என்றால் செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் பதவிலிருந்து நீக்குவேன் என்றேன்.தங்க தமிழ்செல்வனை நீக்க அச்சமோ, தயக்கமோ இல்லை.அவர் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பொட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார்.மதுரையை சேர்ந்த நிர்வாகியிடம் தான் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார்.தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் திட்டமிட்ட ஆலோசனை கூட்டம் தான்  என்று தெரிவித்துள்ளார்.