சின்னத்தம்பியை யாரும் துன்புறுத்தவில்லை- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சின்னத்தம்பியை யாரும் துன்புறுத்தவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  சட்டப்பேரவையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், மிருகங்களிடம் இருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து மிருகங்களையும் பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மரம் வளர்ப்பு நடவடிக்கைகளால் 2011ல் 21.76% ஆக இருந்த பசுமை போர்வை பரப்பளவு 23.57 சதவீதமாக அதிகரித்துள்ளது.

காட்டுயானை  சின்னத்தம்பி குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சின்னத்தம்பியை யாரும் துன்புறுத்தவில்லை. கதாநாயகனாக வலம் வருகிறான் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment