பொன்னியின் செல்வனில் இதனால் தான் நடிக்கவில்லை – அமலா பால்!

பொன்னியின் செல்வனில் இதனால் தான் நடிக்கவில்லை – அமலா பால்!

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் அண்மையில் படமாக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஒரு பகுதியில் அமலாபாலும் இருப்பார் என கூறப்பட்டதோடு, பல ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதன் பின்பு அமலாபால் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கான காரணங்கள் அறிவிக்காமல் இருந்தார். தற்போது அதற்கான காரணத்தை அறிவித்துள்ள அமலாபால் இந்த படத்தை நிராகரித்ததற்கான காரணம் கூறியுள்ளார். அதாவது எல்லா வேடங்களையும் ஈசியாக செய்துவிட முடியாது.

எனக்கு வழங்கப்படக் கூடிய கதாபாத்திரம் என்னால் செய்ய முடியுமா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. மேலும் சரியான நேரத்தில் மற்றும் சரியாக நான் பங்களிக்க தவறினால் தேவையற்ற விமர்சனங்கள் ஏற்படும். எனவே இந்த வாய்ப்பு வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால் நிச்சயமாக விரைவில் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பேன் என நம்புகிறேன் கூறியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube