நான் எப்போ சொன்னேன் சச்சின் ,தோனியை தொடர்ந்து கிறிஸ் கெயிலை தொடரும் வியுகம்

இந்தியா -வெஸ்ட இண்டீஸ் அணி  இடையிலான  மூன்று டி 20 ,மூன்று ஒருநாள் போட்டி , 2 டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இதுவரை நடந்த டி 20 தொடரையும் ,  ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் கிறிஸ் கெயில் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.நேற்றைய போட்டியில் கிறிஸ் கெயில் 41 பந்தில் 72 ரன்கள் குவித்தார்.அதில் 8 பவுண்டரி ,5 சிக்ஸர் விளாசினார்.

Image result for Chris Gayle

கிறிஸ் கெயில் விக்கெட்டை இழந்தும்.இந்திய அணி வீரர்கள் கிறிஸ் கெயிலுக்கு கைகொடுத்து வாழ்த்து கூறினார்.மேலும் வெஸ்ட இண்டீஸ் அணி வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.இதனால் வெஸ்ட்  இண்டீஸ் அணியில் இருந்து கிறிஸ் கெயில் ஓய்வு அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டது.Image result for Chris Gayle

உலககோப்பையின் போது கிறிஸ் கெயிலுக்கு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிதான் கடைசி போட்டி என தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் போட்டி முடித்த பிறகு பேசிய கிறிஸ் கெயில் , நான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை , வெஸ்ட்  இண்டீஸ் அணியில் தான் தொடர்கிறேன் அடுத்த அறிவிப்பு வரும் வரை விளையாடுவேன் என கூறினார்.

இப்பொழுது கிறிஸ் கெயில் ஓய்வு குறித்து சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர் உலககோப்பை முடிந்த பிறகு டோனி தந்து ஓய்வை அறிவிப்பார் என பல வியுகங்கள் பரவின. ஆனால் அவரோ சற்று கூட அதை பொருட்படுத்தாமல் ராணுவ பயிற்சிக்கு சென்று விட்டார் இது சச்சினையும் விட்டுவைக்கவில்லை ,எல்லாம் நெட்டிசன்கள் கையிலே .

author avatar
murugan