உலககோப்பைக்கு பிறகு பயிற்சியில் இறங்கிய தோனி ..!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதன் பின்னர் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு ஆகிய அணிகளுடன் விளையாடினர். ஆனால் ஒரு தொடரில் கூட இந்த அணியில் தோனி இடம்பெறவில்லை.
அடுத்த மாதம் பங்களாதேஷ் அணியுடன் இந்திய அணி  டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்தத் தொடரிலும் தோனி கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் டோனி ஜார்க்கண்ட் அண்டர் 23 அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. தோனி அங்குள்ள ஜிம்மில் உடற்பயிற்சி தொடங்கி விட்டதாக கூறியுள்ளனர்.
ஜார்க்கண்ட் அணியின் மூத்த வீரர்கள் வருகின்ற 8-ம் தேதி நடைபெற உள்ள சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாட சென்று உள்ளன .அதனால் தோனி அண்டர் 23  அணியுடன் பயிற்சி ஈடுபடுவதாக தகவல் வெளியாகியது.
தோனி தன்னை தயார் செய்து கொள்வதற்காக ஜிம் , பேட்மிட்டன் மற்றும்  டென்னிஸ் விளையாடி வருகிறார் எனவும் தகவல் வெளியாகியது.

author avatar
murugan