தோனி, ஹார்த்திக் பாண்டியா அதிரடியாக விளையாட சுதந்திரம் வழங்க வேண்டும்! ஹர்பஜன் கோரிக்கை!

உலக கோப்பை தொடர்வருகின்ற30-ம்தேதி தொடங்க உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர அதிரடி வீரர் தோனி அடித்து விளையாட முழு சுதந்திரத்தை வழங்க வேண்டும் என ஹர்பாஜன் சிங் கோரிக்கை வைத்து உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,விக்கெட் கீப்பருமான தோனி சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விளையாடுவது தான் தோனியின் சிறப்பு. இவரின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விளையாடுவதாலே இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்.

களத்தில் இறங்கியதும் அடித்து விளையாடாமல் சிங்கிள் ரன்னாக எடுத்து பொறுமையாக விளையாடுவதும், இக்கட்டாக சூழ்நிலையில் அடித்து விளையாடுவதுமே தோனியின் வழக்கம்.

இதனால், பல்வேறு விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.இறுதி கட்டத்தில் தோனியின் இந்த ஆட்ட முறை பயனளித்தலும் உலககோப்பை போன்ற 50 ஓவர் தொடர்களில் சிக்கல் ஏற்படும் என பலர் கூறுகின்றனர்.

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடுவதற்கான சுதந்திரத்தை தோனிக்கு அணி நிர்வாகம் வழங்க வேண்டுமென ஹர்பஜன் சிங் கோரிக்கை வைத்து உள்ளார்.

எடுத்த உடனே அடித்து விளையாடுவது தான் தான் தோனியின் சிறப்பு என ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.மேலும் தோனி, ஹார்த்திக் பாண்டியா ஆகிய வீரர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுப்பதன் இந்திய அணிக்கு கூடுதல் பலம் பெரும் என கூறியுள்ளார்

author avatar
murugan

Leave a Comment