இரண்டு வார ராணுவ பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வீடு திரும்பும் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்  மஹேந்திர சிங் தோனிக்கு, ராணுவத்தில் லெப்டினட்ண்ட் கர்னல் பதவி கௌரவ பதிவையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் ராணுவத்தில் பயிற்சி பெறுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான விளையாட்டில் இருந்து, விடுவித்து கொண்டார்.

இவர் ராணுவத்தில் பேரசூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் சேர்ந்து முதலில் பயிற்சியில் ஈடுபட்டார். பிறகு, காஷ்மீர் பகுதியில் தரைப்படை வீரர்களுடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டார். இரண்டு வார ராணுவ பயிற்சியில் ஆயுதங்களை எப்படி கையாள்வது, என தோனிக்கு பயிற்றுவிக்கப்பட்டது.

பயிற்சி நிறைவடைந்த பிறகு லே விமான நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டார் மஹேந்திர சிங் தோனி .